பதிவு செய்த நாள்
31 ஆக2016
23:53
புதுடில்லி : இந்தியாவில், ஏழு முக்கிய நகரங்களில், வாகன சோதனை மையங்களை அமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சுற்றுச்சூழலை பாதிக்காத வாகனங்களை தயாரிக்குமாறு, மத்திய அரசு, மோட்டார் வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், வாகனங்களில் பாதுகாப்பு வசதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய, வாகன சோதனை மையங்கள் அமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மானேசர், பெங்களூரு, ரேபரேலி, சில்சார், இந்துார், புனே, சென்னை ஆகிய ஏழு நகரங்களில், 3,700 கோடி ரூபாய் செலவில், வாகன சோதனை மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து, மத்திய சாலை போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏழு நகரங்களில், அமைக்கப்படும் இந்த மையங்களில் வாகனங்களின் எரிபொருள் திறன், விபத்துக்குள்ளாகும் வாகனங்களை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|