பதிவு செய்த நாள்
31 ஆக2016
23:54
புதுடில்லி : மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது: மொத்த உள்நாட்டு உற்பத்தியில், கட்டுமான துறையின் பங்களிப்பு, 8 சதவீதமாக உள்ளது; இத்துறை, 4 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது. இந்நிலையில், கட்டுமான துறைக்கான ஊக்குவிப்பு திட்டங்களுக்கு, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற, அமைச்சரவைக் குழு கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் இடையிலான விவகாரங்களை, விருப்பத்தின் பேரில், புதிய மத்தியஸ்த சட்டத்தின் கீழ் மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கட்டுமான மத்தியஸ்த சட்டம் எளிமையாக்கப்பட்டுள்ளது. அதனால், கட்டுமானம் சார்ந்த பிரச்னைகள் விரைவாக முடிவுக்கு வரும்.பிரச்னைக்கு தீர்வு காணும் வரை, வங்கி உத்தரவாதத்தின் பேரில், ஒப்பந்ததாரருக்கு, 75 சதவீத தொகை வழங்கும் திட்டத்திற்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், திட்டப் பணிகள் முடங்காமல், தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|