பதிவு செய்த நாள்
05 செப்2016
05:00
புதுடில்லி;ஹீரோ மோட்டோகார்ப், 15 புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட இருசக்கரவாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், 2015 - 16ல், இந்தியாவில், 64 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. நடப்பாண்டில் இருசக்கர வாகனங்களுக்கு தேவை அதிகரிக்கும் என்பதால், விற்பனையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக அந்நிறுவனம், அடுத்த எட்டு மாதங்களில், 15 புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட மாடலில், இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளது. இதுகுறித்து, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சால் கூறியதாவது:எங்கள் நிறுவனம், ஐ3எஸ் அச்சீவர் மாடல் இருசக்கர வாகனத்தை, அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யும். இருசக்கரம் மற்றும் ஸ்கூட்டர் மாடலில், நடப்பு நிதியாண்டு இறுதிக்குள், அதிக வாகனங்கள் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|