பதிவு செய்த நாள்
14 செப்2016
06:05
மும்பை:ஜாகுவார் நிறுவனம், இங்கிலாந்தில், 890 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜாகுவார், சொகுசு கார்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், கடந்த ஆக., மாதம், 85 ஆயிரத்து, 726 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்நிலையில், ஜாகுவார், இங்கிலாந்தில், கார் அசெம்பிள் செய்யும் ஆலை அமைக்க, 890 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதுகுறித்து, ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் நிறுவனம், இங்கிலாந்தில் உள்ள சோலிஹூல் என்ற இடத்தில், ஜாகுவார் எக்ஸ்.இ., மாடல் காரை தயாரித்து வருகிறது. இதை, கேஸில் புரோம்விச் என்ற இடத்திற்கு மாற்ற உள்ளோம். இதற்காக, 890 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிகரித்து வரும் எங்கள் வாகனங்களின் தேவைகளை, உடனுக்குடன் பூர்த்தி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|