பதிவு செய்த நாள்
14 செப்2016
06:08
சென்னை:அமெரிக்காவைச் சேர்ந்த பெப்சிகோ நிறுவனம், இந்தியாவில் பெப்சிகோ இந்தியா என்ற துணை நிறுவனம் மூலம், ‘பெப்சி, மவுண்டன் டியூ’ உள்ளிட்ட குளிர்பானங்களுடன், ‘லேஸ், குவாக்கர், சீட்டோஸ்’ உள்ளிட்ட நொறுக்குத் தீனி வகைகளையும் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் பாரம்பரிய ஊட்டச்சத்துள்ள உணவு வகைகளை, நவீன தொழில்நுட்பத்தில் தயாரித்து, அறிமுகப்படுத்த, பெப்சிகோ நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இதற்காக, பெப்சிகோ தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான இந்திரா நுாயி, சென்னை வந்து, தென்னிந்திய உணவகம் ஒன்றில், பல வகையான பாரம்பரிய உணவுகளை ருசி பார்த்தார். அவருடன், பெப்சிகோ நிறுவனத்தின், ஊட்டச்சத்து உணவுப் பிரிவின் விளம்பர துாதரான விகாஸ் கன்னாவும், உணவு வகைகளை ருசித்தார். இருவரும், பலவகை உணவுகளை ருசித்து மகிழ்ந்து, அவற்றில் எந்த வகையான ஊட்டச்சத்து உணவுகளை, பெப்சிகோ பிராண்டில் அறிமுகப்படுத்தலாம் என, ஆலோசித்தனர்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|