பதிவு செய்த நாள்
25 செப்2016
00:46
கர்னால்:பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனம், ஆயுர்வேதம், மூலிகை, உணவுப் பொருட்கள் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்நிறுவனம், தற்போது, உள்நாட்டில், பால் பொருட்கள் தயாரிப்பில் களமிறங்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியாவில், தற்போது, பால் பொருட்கள் துறையில், மூன்று லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு வியாபாரம் நடக்கிறது. இது, 2022ல், ஐந்து லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. பதஞ்சலி நிறுவனமும், பால் பொருட்கள் தயாரிப்பில் களமிறங்க உள்ளது. முதற்கட்டமாக, நடப்பு நிதியாண்டில், மஹாராஷ்டிரா, கர்நாடகா, உ.பி., மாநிலங்களில் உள்ள, மூன்று ஆலைகளில் இருந்து, பால் பொருட்கள் உற்பத்தியை துவக்கும். இதன் மூலம், கிராமங்களில், கால்நடைகள் வைத்திருப்பவர்கள் பயனடைவர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|