பதிவு செய்த நாள்
25 செப்2016
00:47
விசாகப்பட்டினம்;ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில், சர்வதேச கடல் உணவு கண்காட்சியை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்து பேசியதாவது:மத்திய அரசு, ஏற்றுமதியை ஊக்குவிக்க, வர்த்தக ஏற்றுமதி திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும், 22 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குகிறது.
நடப்பு நிதியாண்டு முதல், கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்கு, கூடுதலாக, 1,500 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். மேலும், கடலோர மாநிலங்களில், கடல் வாழ் உயிரினங்கள் வளர்ப்புக்கான முகமை அமைப்புகள் ஏற்படுத்தப்படும். கடல் உணவு ஏற்றுமதிக்கு சலுகைகள் வழங்கப்படும். கடல் உணவு உற்பத்தியில், இந்தியா சிறந்து விளங்குகிறது. இத்துறையின் ஆற்றலை முழுமையாக பயன்படுத்த வேண்டும். ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள், கடல் வாழ் உயிரினங்கள் வளர்ப்பு துறையில், இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|