பதிவு செய்த நாள்
25 செப்2016
23:41
உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் மியூச்சுவல் பண்ட்களின் முதலீடு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.இந்தியாவை பொருத்தவரை ஜி.டி.பி.,க்கும் மியூச்சுவல் பண்ட் முதலீடுக்குமான விகிதம், 7 சதவீதமாக மட்டுமே இருக்கிறது.ஆஸ்திரேலியாவில், இந்த விகிதம், 114 சதவீதமாகவும், அமெரிக்காவில், 91 சதவீதமாகவும், பிரிட்டனில், 51 சதவீதமாகவும் இருக்கிறது.
கடந்த, 2014 – 15ம் ஆண்டில், இந்தியாவில் மொத்த நிதி முதலீடுகளில் மியூச்சுவல் பண்ட் முதலீடு 3.4 சதவீதமாக மட்டுமே இருப்பதாகவும் ஆலோசனை நிறுவனமான இ ஒய் அண்ட் கேப் மியூச்சுவல் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.இந்தியாவில் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள் குறைவாக இருந்தாலும், இத்துறையில் அதிக அளவில் வளர்ச்சி வாய்ப்புகள் இருப்பதை இது சுட்டிக்காட்டுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மியூச்சுவல் பண்ட் துறை இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியூச்சுவல் பண்ட் முதலீடுகளை மேலும் பரவலாக்குவதற்கான முயற்சியை பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யும் மேற்கொண்டு வருகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பமும் இதில் உதவும் என கருதப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|