பதிவு செய்த நாள்
26 செப்2016
09:57
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, வர்த்தக நேர துவக்கத்தின் போது (செப்.,26, காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 148.90 புள்ளிகள் சரிந்து 28,519.32 புள்ளிகளாகவும், நிப்டி 46.45 புள்ளிகள் சரிந்து 8785.10 புள்ளிகளாகவும் இருந்தன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் இன்று முதல் முறையாக நேரடி விவாதத்தில் பங்கேற்க உள்ளதன் காரணமாக அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வால் ஸ்டிரீட் சந்தையில் ஏற்பட்ட சரிவின் காரணமாக ஆசிய பங்குகள் பலமிழந்து காணப்படுகின்றன. இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்படுகின்றன. சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதும் இந்திய பங்குச்சந்தைகளின் சரிவிற்கு முக்கிய காரணமாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|