பதிவு செய்த நாள்
26 செப்2016
23:30
பீஜிங் : சீன அரசு பத்திரிகையான, ‘குளோபல் டைம்ஸ்’, சீன நிறுவனங்கள், இந்தியாவுக்கு செல்வதால், உள்நாட்டில் வேலையிழப்பு ஏற்படும்’ என, அச்சம் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: சீனாவின் ஹுவாய், ஜியோனி உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள், இந்தியாவில் மொபைல் போன் தயாரிப்பில் இறங்கியுள்ளன. சீனாவின் தொழில் துறை, இந்தியாவிற்கு இடம்பெயர்வது கவலை அளிக்கிறது; இதை ஏற்க முடியாது. இந்தியாவில், ‘அசெம்பிளிங்’ தொழிற்சாலைகளை அமைக்க, சீன நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. இது, இந்தியா – சீனா இடையிலான பொருளாதார போட்டியை, புதிய நிலைக்கு கொண்டு சென்றுவிடும். சீன மொபைல் போன் நிறுவனங்கள், இந்தியாவிற்கு இடம்பெயர்வதால், உள்நாட்டில் வேலையிழப்பு ஏற்படும்; இதுவரை ஏற்பட்ட வேலையிழப்பை ஆராய வேண்டும். இந்தியா, தயாரிப்பு துறையில் பலமான அடித்தளத்தை அமைத்து வருகிறது. அதற்கு போட்டியாக, சீனா உருவெடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|