பதிவு செய்த நாள்
26 செப்2016
23:31
மும்பை : சமீபத்தில், மொபைல் போன் சேவையில் களமிறங்கிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தன் வாடிக்கையாளர்களுக்கு, போட்டி நிறுவனங்கள், உள் இணைப்பு கொடுக்க மறுப்பதாக புகார் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், ‘மொபைல் போன் சேவையில், முன்னிலையில் உள்ள ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு ஆதரவாக, மொபைல் போன் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பான, ‘கோய்’ ஒருதலைபட்சமாக செயல்படுகிறது’ என, ரிலையன்ஸ் ஜியோ குற்றஞ்சாட்டி உள்ளது. இதை மறுத்துள்ள அந்த அமைப்பு, ‘வேறொரு நிறுவனம் மூலம் அலைவரிசை உரிமையை பெற்று, மொபைல் போன் சேவையில், ரிலையன்ஸ் ஜியோ புறவாசல் வழியாக நுழைந்துள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளில், இச்சேவையில் இறங்கிய புதிய நிறுவனங்கள், இது போன்ற குற்றச்சாட்டுகளை கூறியதில்லை’ என, தெரிவித்து உள்ளது. இதனிடையே, ‘கோய்’ அமைப்பின் செயல்பாடுகளை, சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற மூன்று நீதிபதிகளை கொண்டு விசாரிக்க வேண்டும் என, ரிலையன்ஸ் ஜியோ வலியுறுத்தி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|