பதிவு செய்த நாள்
26 செப்2016
23:34
புதுடில்லி : ‘இந்தியாவில், ரொக்கம் சாரா, ‘டிஜிட்டல்’ முறையிலான பணப் பரிவர்த்தனையை, மேலும் அதிகரிக்க வேண்டும்’ என, கேப்ஜெமினி நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அதன் விபரம்: இந்தியாவில், ‘டிஜிட்டல் பேமன்ட்’ எனப்படும், மின்னணு தொழில்நுட்பம் சார்ந்த, பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. ரொக்கம் சாராத, கணினி, மொபைல் போன் வாயிலான பணப் பரிவர்த்தனைகளின் வளர்ச்சி, இந்தியாவின் முழுமையான ஆற்றலுக்கு ஈடாக இல்லை; மிகச்சிறிய அளவிற்கே உள்ளது. வங்கிகள், இத்தகைய பரிவர்த்தனைகளை அதிகம் ஊக்குவிக்காதது தான், இதற்கு காரணம்.
ரொக்கம் சாரா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க, பொதுத் துறையைச் சேர்ந்த, நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் முயற்சி எடுத்து வருகிறது. ஆனால், அதற்கு, அனைத்து வங்கிகளின் ஆதரவு கிடைக்காத நிலை உள்ளது. வங்கிகள், ரொக்கம் சாரா டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு, மேலும் ஊக்கமளிக்க வேண்டும். கடந்த, 2015ல், சர்வதேச டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, முதன்முறையாக, 10 சதவீதம் வளர்ச்சி கண்டு, 42,630 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, 2014ல், 8.9 சதவீத வளர்ச்சியுடன், 38,730 கோடி டாலராக இருந்தது.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில், வளரும் ஆசிய நாடுகள், மிக அதிகமாக, 31.5 சதவீத வளர்ச்சியை கண்டு உள்ளன. அதில், சீனா மற்றும் இந்தியாவின் வளர்ச்சி, முறையே, 47 சதவீதம் மற்றும், 13.4 சதவீதம் என்றளவில் உள்ளது. இந்தியாவில், அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்கும் நோக்கில், 2015 ஆகஸ்டில், ‘பேமன்ட் பேங்க்’ துவங்க, 11 நிறுவனங்களுக்கு, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|