பதிவு செய்த நாள்
28 செப்2016
04:07
புதுடில்லி : காஷ்மீரின் யூரி ராணுவ முகாம்கள் மீது, பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ராணுவ வீரர்கள், 18 பேர் பலியாகினர்.
இதையடுத்து, நேற்று முன்தினம், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற, சிந்து நதிநீர் பங்கீட்டு ஆணையத்தின் ஆய்வுக் கூட்டத்தில், பாக்.,கிற்கு செல்லும் மூன்று நதிகளில், இந்தியாவிற்கு உள்ள உரிமைகளை முழுமையாக பயன்படுத்தவும், ஒப்பந்தப்படி, குறிப்பிட்ட அளவு தண்ணீர் மட்டுமே தரவும் முடிவு செய்யப்பட்டது.
அடுத்தகட்டமாக, 1996ல், பாக்.,கிற்கு, இந்தியா நல்லெண்ண அடிப்படையில் வழங்கிய, எம்.எப்.என்., எனப்படும், ‘வர்த்தகத்திற்கு மிகவும் உகந்த நாடு’ என்ற அந்தஸ்தை, மறுபரிசீலனை செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக, நாளை, பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது என, தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா – பாக்., இடையே, பரஸ்பர, எம்.எப்.என்., அந்தஸ்து நடைமுறையில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|