பதிவு செய்த நாள்
28 செப்2016
04:07
சென்னை : டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு, 24 மணி நேரமும், சாலையோர உதவி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, வாகனங்களில் எரிபொருள் தேவை, பழுது நீக்குதல் உள்ளிட்ட தேவைகளை, உடனடியாக நிறைவேற்றி தரும் வசதியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த திட்டம், முதற்கட்டமாக, 70 நகரங்களில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இரண்டாவது கட்டமாக, 200 நகரங்களில், வரும் அக்., மாதத்திற்குள் விரிவுபடுத்த உள்ளது; அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள், நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
இதுகுறித்து, டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின், விற்பனை மற்றும் சேவை பிரிவு துணைத் தலைவர் ஜே.எஸ்.சீனிவாசன் கூறுகையில், ‘‘எங்கள் நிறுவனத்திற்கு, நாடு முழுவதும், 3,500 டீலர்கள் உள்ளனர். இதனால், வாடிக்கையாளர்கள், எங்களை தொடர்பு கொள்ளும் போது, 24 மணி நேரமும் சிறப்பான சேவை வழங்க முடியும்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|