பதிவு செய்த நாள்
28 செப்2016
04:09
புதுடில்லி : இந்திய சுற்றுலா கழகம், பொன்விழாவை ஒட்டி, பல மாற்றங்களையும், சலுகைகளையும் அறிவிக்க உள்ளது.
சுற்றுலா துறையை மேம்படுத்த, ஐ.டி.டி.சி., என்ற இந்திய சுற்றுலா மேம்பாட்டு கழகம் துவங்கப்பட்டு, அக்., 1ம் தேதி உடன், 50 ஆண்டுகள் ஆகின்றன. அதை குறிக்கும் வகையில், அதன் லோகோவை மாற்றுவது, அறைகளுக்கான கட்டணத்தை, 50 சதவீதம் அளவுக்கு குறைப்பது என, சுற்றுலா அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, டில்லி, ஜெய்ப்பூர், ஜம்மு, கவுகாத்தி, போபால், பாரத்பூர், இட்னாநகர், புவனேஸ்வர், பாட்னா, ராஞ்சி, மைசூரில் உள்ள அசோகா ஓட்டல்களின், அறை கட்டணங்களுக்கு, அக்., 8 வரை, 50 சதவீத தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. உணவு மற்றும் குளிர்பானங்களுக்கு, 25 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். மேலும், ஐ.டி.டி.சி., கட்டுப்பாட்டில் உள்ள, 14 ஓட்டல்களில், 12 ஓட்டல்களை தனியார் மயமாக்கவும், சுற்றுலா துறை திட்டமிட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|