பதிவு செய்த நாள்
29 செப்2016
01:47
புதுடில்லி : எச்.டி.எப்.சி., எர்கோ, பயிர் காப்பீட்டில், 10 சதவீத சந்தை பங்களிப்பை ஈர்க்க திட்டமிட்டுஉள்ளது.
மத்திய அரசு, ‘பிரதான் மந்திரி பாசல் பீமயோஜனா’ என்ற பயிர் காப்பீட்டு திட்டத்தை, கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்தது. அந்த திட்டத்தின் கீழ், நாடு முழுவதும், நான்கு கோடி விவசாயிகளுக்கு, பயிர் காப்பீடு வழங்க, அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தில், எச்.டி.எப்.சி., எர்கோ பங்கேற்பதன் மூலம், பயிர் காப்பீட்டில், 10 சதவீத சந்தை பங்களிப்பை பெற முடிவு செய்துள்ளது. இதற்காக, எச்.டி.எப்.சி., நாட்டின் பல மாநிலங்களில், பயிர் காப்பீட்டு திட்டத்தை துவக்கியுள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மத்திய அரசின் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், அந்த பிரிவில், அதிக சந்தை பங்களிப்பை பெற முடியும்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|