பதிவு செய்த நாள்
30 செப்2016
00:44
புதுடில்லி:உணவு தானியங்கள் பயன்பாட்டில், சணல் உபயோகத்தை அதிகப்படுத்தும் வகையில், அதை கட்டாயமாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத, சணல் துறையை ஊக்குவிக்க, மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், வளர்ச்சியில் அத்துறை மிகவும் பின்தங்கியே உள்ளது. இதையடுத்து, உணவு தானியங்கள், சர்க்கரை உள்ளிட்டவற்றை பாதுகாத்து வைக்க, சணல் மூலம் தயாரிக்கப்பட்ட சாக்கு பைகளை, கட்டாயமாக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, நடப்பு சணல் பருவத்தில் (2016 ஜூலை முதல், 2017 செப்., வரை) உணவு தானியங்களில், 90 சதவீதத்தையும், சர்க்கரையில், 20 சதவீதத்தையும் அடைத்து வைக்க, சாக்கு பைகளை பயன்படுத்துவதை கட்டாயமாக்குமாறு, ஜவுளி அமைச்சகம், மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்தால், சணல் துறையில் ஈடுபட்டுள்ளோர் பலனடைவர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|