பதிவு செய்த நாள்
30 செப்2016
00:48
புதுடில்லி; வலைதளம் மூலம் புதுமையான தொழில்களில் ஈடுபடும் நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என, அழைக்கப்படுகின்றன. இத்தகைய நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில், மத்திய அரசு, ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ என்ற திட்டத்தை துவக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவ, 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, வருமான வரி சலுகைகள், தொழிலாளர் சட்டத்தின் கீழ், ஆய்வுகளில் இருந்து விலக்கு, மூலதன ஆதாய வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்ட வளர்ச்சிக்கும், இத்துறை சார்ந்த தொழில்முனைவோர்களுக்கும் தகுந்த வழிகாட்டுதலை வழங்கவும், மூத்த ஆலோசகர் மற்றும் இரு உதவி ஆலோசகர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான விளம்பரத்தை, தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ளது. இந்த ஆலோசகர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு துணை புரிவர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|