பதிவு செய்த நாள்
30 செப்2016
00:50
ஈரோடு;யு.எஸ்., பெடரல் வங்கியின் முடிவால், அமெரிக்க முதலீட்டாளர்கள், தங்கத்தில் முதலீடு செய்வதை தவிர்த்து வருவதால், இந்தியாவில் தங்கத்தின் விலை சரிந்து வருகிறது. இதுகுறித்து, ஈரோடு மாவட்ட தங்கம், வெள்ளி, வைரம் வியாபாரிகள் சங்க செயலர் தர்மராஜ் கூறியதாவது: ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, இங்கிலாந்து வெளியேறிவிட்ட காரணத்தால், யூரோவின் மதிப்பு குறைந்து,
அமெரிக்காவின் டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் பெடரல் வங்கி, மூன்று வாரங்களுக்கு முன், முதலீட்டாளர்கள் கூட்டத்தை நடத்தி, அமெரிக்க முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக, அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து, தங்கத்தின் மதிப்பு குறைந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன், தேசிய அளவில் சரிந்த தங்கத்தின் விலை மீளவில்லை. புரட்டாசி மாதம் என்பதால் சராசரி விற்பனை குறைந்துள்ளது. ஐப்பசி பிறந்தால், திருமண சீசன் விற்பனை துவங்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|