பதிவு செய்த நாள்
02 அக்2016
00:10
புதுடில்லி:விளைபொருள் முன்பேர வணிகத்தை மீண்டும் துவக்க, ஐ.சி.இ.எக்ஸ்., நிறுவனத்திற்கு, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி அளித்துள்ளது. ஐ.சி.இ.எக்ஸ்., நிறுவனம், 2009ல், விளைபொருள் முன்பேர வர்த்தகத்தில் இறங்கியது. ஆனால், இத்துறையில் முன்னணியில் உள்ள, எம்.சி.எக்ஸ்., மற்றும் என்.சி.டி.இ.எக்ஸ்., நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியாமல், இரு ஆண்டுகளுக்கு முன், வர்த்தகத்தை நிறுத்தியது.
தற்போது, நவம்பர் இறுதியில் மீண்டும் வர்த்தகத்தை துவக்க முடிவு செய்துள்ளது.‘இம்முறை, ஐ.சி.இ.எக்ஸ்., வைரம் மற்றும் கச்சா எண்ணெய்யை முக்கிய இலக்காக கொண்டு வர்த்தக செயல்பாடுகளை மேற்கொள்ளும்’ என, சமீபத்தில் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி தெரிவித்திருந்தார். ஐ.சி.இ.எக்ஸ்., நிறுவனத்தில், அனில் அம்பானியின் ஆர் – நெக்ஸ்ட் நிறுவனம், 26 சதவீத பங்கு முதலீட்டை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|