பதிவு செய்த நாள்
02 அக்2016
00:13
புவனேஸ்வர்:டாடா ஸ்டீல் நிறுவனம், கலிங்கா நகரில் உள்ள உருக்காலையை, விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளது. டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு, ஒடிசா மாநிலம், கலிங்கா நகர் என்ற இடத்தில், உருக்காலை உள்ளது. அந்த ஆலை, ஆண்டுக்கு, மூன்று லட்சம் டன் உருக்கை உற்பத்தி செய்யும் திறனுடையது. இதை ஆண்டுக்கு, ஆறு லட்சம் டன்னாக விரிவாக்கம் செய்ய, டாடா ஸ்டீல் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் இந்தியா, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நிர்வாக இயக்குனர், டி.வி.நரேந்திரன் கூறியதாவது:இந்தியாவில், உருக்கு பொருட்களுக்கான தேவை, 5 முதல், 6 சதவீதம் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு, எங்கள் இயக்குனர் குழுவிடம் பரிந்துரைக்கப்படும். தற்போது, கலிங்கா நகர் ஆலையில், மூன்று லட்சம் டன் என்ற முழு அளவுக்கு, உற்பத்தி செய்ய கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|