பதிவு செய்த நாள்
02 அக்2016
00:22
புதுடில்லி:கடந்த செப்., மாதத்தில், மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் கார்கள் விற்பனை, முன் எப்போதும் இல்லாத வகையில், 31 சதவீதம் உயர்ந்து, 1.49 லட்சமாக அதிகரித்து சாதனை படைத்திருக்கிறது. கடந்த செப்., மாதம், சிறிய வகையைச் சேர்ந்த ஆல்டோ, வேகன் ஆர் மாடல் கார்கள் விற்பனை, 44 ஆயிரத்து, 395 ஆக அதிகரித்துள்ளது.
இது, முந்தைய ஆண்டின், இதே மாதத்தில், 35 ஆயிரத்து, 570 ஆக குறைந்திருந்தது. இதே மாதங்களில், நடுத்தர பிரிவை சேர்ந்த ஸ்விப்ட், ரிட்ஸ், செலிரியோ, பலேனோ, டிசையர் மாடல் கார்கள் விற்பனை, 44 ஆயிரத்து, 826ல் இருந்து, 50 ஆயிரத்து, 324 ஆக உயர்ந்துள்ளது. எஸ்.யூ.வி., மாடலை சேர்ந்த ஜிப்சி, விட்டாரா பிரெஸ்ஸா, எஸ்கிராஸ், எர்டிகா கார்கள் விற்பனை, 191 சதவீதம் உயர்ந்து, 6,331ல் இருந்து, 18 ஆயிரத்து, 423 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில், மாருதி கார்கள் ஏற்றுமதி, 54 சதவீதம் அதிகரித்து, 7,676லிருந்து, 11 ஆயிரத்து, 822 கார்களாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|