பதிவு செய்த நாள்
09 அக்2016
01:15
புதுடில்லி:சர்வதேச தர நிர்ணய நிறுவனமான, ‘மூடிஸ்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:இந்தியாவில், இந்தாண்டு அதிக அளவில் புதிய மாடல் கார்கள் அறிமுகமாகி வருகின்றன. இதனால், பயணிகள் வாகன விற்பனை, 8 சதவீதம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை குறைவால், வாகனங்களுக்கான எரிபொருள் செலவு குறைந்துள்ளது. குறைந்த வட்டியில் சுலபமான மாத தவணையில், கார்கள் கிடைக்கின்றன. அதனால், இந்தியாவில் கார் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தாண்டு, இந்தியாவில், பயணிகள் வாகன விற்பனை, 34 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும். அதேசமயம், உலகளவில், வாகன விற்பனை மந்தமாக உள்ளது. இதற்கு பொருளாதார மந்தநிலை, ஸ்திரமற்ற அரசியல் சூழல் போன்ற காரணங்கள் உள்ளன. அதனால், சர்வதேச கார் தயாரிப்பு துறையின் கடன் தகுதி மதிப்பீடு, ஸ்திர நிலையில் இருந்து, இடர்பாடு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|