பதிவு செய்த நாள்
18 அக்2016
10:55
புதுடில்லி: இந்தியாவில் இந்தாண்டு சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை பெருமளவில் சரிவை சந்திக்க தொடங்கியுள்ளதாக அனைத்திந்திய வணிகர்கள் சங்கம் தெரிவிக்கிறது, நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் நடக்கும் விற்பனை விவரங்களின் அடிப்படையில் இந்தாண்டு சீனப் பொருட்களின் விற்பனை எப்போதும் இல்லாத அளவுக்கு 30 சதவிகிதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
விழிப்புணர்வு : சமூக வலைதளங்களில் சீனப் பொருட்களை தவிர்க்கும் படி செய்யப்பட்ட பிரச்சாரத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. குறிப்பாக நம் இந்திய தயாரிப்புகளுக்கு போட்டியாக வந்துள்ள சீன பட்டாசுகளை தவிர்க்கும் படி பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இதன் பலனாக பெரும்பாலான மக்கள் சீன பட்டாசுகளை தவிர்க்க முடிவு செய்து விட்டனர். இது தவிர செல்போன்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், ஆபத்து விளைவிக்கும் சீன பொம்மைகள், சமையலுக்கு பயன்படும் பொருட்கள், பாத்திரங்கள் போன்றவற்றின் விற்பனையும் சரிந்து வருகிறது.
தடுமாற்றம் : சீன பொருட்களுக்கு எதிரான பிரச்சாரம் அதில் அதிக அளவு முதலீடு செய்துள்ள இந்திய வணிகர்களை தடுமாற வைத்துள்ளது. இதனால் வியாபாரிகளுக்கு தவிர்க்க முடியாத நஷ்டமும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் இனிவரும் பண்டிகை காலங்களில் இந்தியாவில் சீனப் பொருட்களின் இறக்குமதி வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|