தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு ... 2020 ல் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வருகிறது 5ஜி சேவை 2020 ல் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வருகிறது 5ஜி சேவை ...
வங்கிகளின் எச்சரிக்கையை புறக்கணிக்காமல் 'பின் நம்பர் 'ஐ மாற்றுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2016
11:45

புதுடில்லி : கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களை பின் நம்பர் எனப்படும் ரகசிய குறியீட்டு எண்ணை மாற்றுமாறு எச்சரித்து வருகின்றன. இதனை வழக்கமான அறிவுறுத்தல் என்று எடுத்துக் கொள்ளமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாடிக்கையாளர்கள் தங்களின் பின் நம்பரை மாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.சில தனியார் வங்கிகளின் ஏடிஎம்.,கள் மூலம் டெபிட் கார்டுகளின் குறியீட்டு எண்கள் குறித்த தகவல்கள் கசிந்ததன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாடிக்கையாளர்கள் தங்களின் பின் நம்பரை மாற்ற வேண்டும் என சைபர் பாதுகாப்பு சேவையின் தலைவர் சிவராம கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஹார்டுவேர் செக்யூரிட்டி மோடுல்- ஹச்எஸ்எம் (Hardware Security Module)வழியாகவே இந்த தகவல்கள் கசிந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும், ஏடிஎம் இயந்திரம் மற்றும் ஏடிஎம் பயன்பாட்டாளர்கள் வழியாகவும் இந்த தகவல் கசிந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.பொதுவாக வாடிக்கையாளர்கள் உருவாக்கும் பின் நம்பர்கள் , கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மற்றும் ஹச்எஸ்எம் ஆகிய இரண்டு இடங்களில் சேகரிக்கப்படுகின்றன. பின் நம்பர்களை ஹச்எஸ்எம்.,ல் இருந்து எடுப்பது முடியாத காரியம். ஹச்எஸ்எம்.,க்கள் வழக்கமான டேட்டாபேஸ்களை விட அதிகம் பாதுகாப்பானவை. பலர் ஒரே பின் நம்பரை தங்களின் கிரெட் கார்டு, மொபைல், டெபிட் கார்டு ஆகியவற்றிற்கு பயன்படுத்துகிறார்கள். இதனால் மோசடி செய்பவர்கள் ஒருவரின் பின் நம்பரை திருடி எடுப்பதன் மூலம் அவர்களின் கிரெடிட் கார்டுகள், மொபைல் போன்கள் உள்ளிட்டவைகளில் இருந்து அவர்களை பற்றிய தகவல்களை பெறுகிறார்கள்.இந்தியாவில் 70 சதவீதம் ஏடிஎம்.,க்கள் அதிக ஆள் நடமாட்டம் இல்லாத புறநகர் பகுதிகளிலேயே இயங்கி வருகின்றன. மோசடி செய்பவர்கள் ஏடிஎம்., இயந்திரங்களை பயன்படுத்தி மோசடி செய்வதற்கும், தகவல்களை திருடுவதற்கும் இது வழிவகுக்கின்றன. புறநகர்களில் இருக்கும் பெரும்பாலான ஏடிஎம்.,க்கள் அந்த வங்கிகளால் தேவையான அளவு தொடர்ந்து கண்காணிப்படுவதில்லை. இதுவும் ஏடிஎம்., திருட்டுக்கள், மோசடிகள் நடப்பதற்கு முக்கிய காரணமாக அமைக்கிறது என சைபர் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)