பதிவு செய்த நாள்
21 அக்2016
15:56
புதுடில்லி : ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஓராண்டுக்கும் கட்டணமில்லா டேட்டா, வாழ்நாள் முழுவதும் இலவச வாய்ஸ் அழைப்பு உள்ளிட்ட சேவைகளை வழங்குவதாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. ஜியோ வாய்ஸ் அழைப்புக்களை இலவசமாகவும், மற்ற தொலைத் தொடர் அழைப்புக்களுக்கு நிமிடத்திற்கு 14 காசுகள் என்ற கட்டணத்திலும் வாய்ஸ் அழைப்புக்களை வழங்குவதாகவும் ஜியோ அறிவித்திருந்தது.இது வாடிக்கையாளர்களை ஏமாற்றும் அறிவிப்பு என பார்தி ஏர்டெல், வோடோபோன் போன்ற பிற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் டிராயிடம் புகார் அளித்தன. ஜியோவின் இந்த அறிவிப்புக்களுக்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்த டிராய், இலவச வாய்ஸ் அழைப்புக்களுக்கு தடையில்லா சான்று வழங்கி உள்ளது. இது தொலைத் தொடர்பு துறையில் ரிலையன்ஸ் ஜியோவிற்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|