பதிவு செய்த நாள்
22 அக்2016
03:38
மும்பை;மகிந்திரா நிறுவனம், டிராக்டர் உள்ளிட்ட சாதனங்களை வாடகைக்கு விடும் தொழிலிலும் இறங்கியிருக்கிறது. மகிந்திரா குழுமத்தை சேர்ந்த மகிந்திரா பார்ம் எக்யூப்மென்ட் நிறுவனம், ‘டிரிங்கோ’ என்ற பெயரில், டிராக்டர் உள்ளிட்ட வேளாண் சாதனங்களை, விவசாயிகளுக்கு, வாடகைக்கு விடுகிறது. தற்போது மஹாராஷ்டிரா மாநிலத்தில் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி, அரவிந்த் குமார் கூறியதாவது:எங்கள் நிறுவனம், டிராக்டர், வேளாண் துறைக்கு பயன்படுத்தும் இயந்திரங்கள், தளவாடங்களை, விவசாயிகளுக்கு, வாடகைக்கு வழங்குகிறது. தற்போது, மஹாராஷ்டிராவில், முதன்முதலாக, சட்டாரா மாவட்டத்தில் உள்ள இரண்டு இடங்களில் இந்த வசதி துவங்கப்பட்டுஉள்ளது. இதனால், சொந்தமாக டிராக்டர் வாங்க முடியாத விவசாயிகள் பலனடைவர். பிற மாநிலங்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|