பதிவு செய்த நாள்
22 அக்2016
03:39
புதுடில்லி;மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கில், 2015 நவ., 5ல், முதன்முதலாக தங்க சேமிப்பு பத்திரத்தை அறிமுகப்படுத்தியது.
இதுவரை, ஐந்து முறை, தங்க சேமிப்பு பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆறாவது முறையாக, வரும், 24ம் தேதி, தங்க சேமிப்பு பத்திரம் வெளியிடப்பட உள்ளது. அவற்றில், நவ., 2 வரை, முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம். நவ., 17ல், தங்க சேமிப்பு பத்திரங்கள், முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும். வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் நிறுவனம், முக்கிய நகரங்களில் உள்ள அஞ்சலகங்கள், பங்குச் சந்தைகள் ஆகியவற்றின் மூலம், தங்க சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.
முதலீட்டின் மீது, 2.5 சதவீதம் ஆண்டு வட்டி, அரையாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும்.தங்க சேமிப்பு பத்திரங்கள், வெளியீட்டிற்கு பின், பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும். தங்க சேமிப்பு பத்திரங்கள், எட்டு ஆண்டுகள் முதிர்வு காலத்தை கொண்டவை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|