கூடுதல் நிதி சேவை­களில் அன்­னிய முத­லீட்­டிற்கு அனு­மதிகூடுதல் நிதி சேவை­களில் அன்­னிய முத­லீட்­டிற்கு அனு­மதி ... ‘ஆர்­ஜியோ’ சேவையை முடக்கிய நிறு­வ­னங்­க­ளுக்கு அப­ராதம் ‘ஆர்­ஜியோ’ சேவையை முடக்கிய நிறு­வ­னங்­க­ளுக்கு அப­ராதம் ...
அதி­ரடி விலை குறைப்பு, சலு­கைகள்:வலை­தள நிறு­வ­னங்கள் ‘அடா­வடி’ வர்த்­தகம்:சில்­லரை விற்­ப­னை­யா­ளர்கள் புகார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2016
03:42

புது­டில்லி;வலை­தள சந்தை நிறு­வ­னங்கள்,அதி­ரடி விலை குறைப்பில் பொருட்களை விற்­பதால், கடை­களில் விற்­பனை பாதிக்­கப்­ப­டு­வ­தாக,சில்­லரை வணி­கர்கள், மத்­தியஅர­சிடம் புகார் தெரி­வித்து உள்­ளனர்.
பண்­டிகை காலத்தை முன் னிட்டு, ‘அமேசான், ஸ்நாப்டீல், பிளிப்கார்ட்’ உள்ளிட்ட வலை­தள சந்தை நிறு­வ­னங்கள், குறைந்த விலையில், ‘டிவி, ரெப்­ரி­ஜி­ரேட்டர், வாஷிங் மிஷின், மொபைல் போன்’ உட்பட ஏரா­ள­மான பொருட்களை விற்­பனை செய்­கின்­றன. இதற்­காக, ஊட­கங்­களில் மிகப்­பெ­ரிய அளவில் விளம்­பரம் செய்­யப்­ப­டு­கி­றது. தள்­ளு­படி சலு­கைகள் கார­ண­மாக, வலை­த­ளங்­களில் பொருட்கள் வாங்கும் போக்கு அதி­க­ரித்து வரு­கி­றது. அலைச்சல் இன்றி, வீடு தேடி பொருள் வந்து விடு­வதால், இளைய சமூ­கத்­தினர் மத்­தியில், வலை­தள நிறு­வ­னங்­களின் பொருட்­க­ளுக்கு மவுசு பெருகி உள்­ளது.
இதனால், கடை­களில் பொருட்­களை விற்­பனை செய்யும் சில்லரை வர்த்­த­கர்கள், வலை­தள சந்தை நிறு­வ­னங்­களின் போட்டியை சமாளிக்க முடி­யாமல் திண­று­கின்­றனர்.‘வலை­தள சந்தை நிறு­வ­னங்கள், பொருட்­களை விற்­பனை செய்­வோ­ருக்கும், வாங்கும் நுகர்­வோ­ருக்கும் இடையே, பால­மாக மட்­டுமே செயல்­பட வேண்டும்; நேர­டி­யா­கவோ, மறை­மு­க­மா­கவோ, பொருட்கள், சேவைகள் ஆகி­ய­வற்­றுக்­கான விலையில் தலை­யிடக் கூடாது’ என, தொழில் கொள்கை மற்றும் மேம்­பாட்டு துறையின் சட்ட விதி­முறை கூறுகிறது.
இதை, வலை­தள சந்தை நிறு­வ­னங்கள் மீறி நடந்து கொள்­வ­தாக, இந்­திய சில்­லரை வர்த்­த­கர்கள் கூட்ட­மைப்பு குற்­றஞ்­சாட்டி உள்ளது.இது தொடர்­பாக, இக்­கூட்­ட­மைப்பைச் சேர்ந்த, பியூச்சர் குழு­மத்தின் தலைமை செயல் அதி­காரி, கிஷோர் பியானி தலை­மை­யி­லான வணி­கர்கள் குழு, மத்­திய நிதி­அ­மைச்சர் அருண் ஜெட்­லியை, டில்­லியில் சந்­தித்து பேசி­யது. அப்­போது, வலை­தள சந்தை நிறு­வ­னங்­களின் முறை­யற்ற செயல்­பா­டுகள் குறித்து புகார் தெரி­விக்­கப்­பட்­டது.
இதை­ய­டுத்து செய்­தி­யா­ளர்­களிடம், கிஷோர் பியானி கூறியதாவது:வலை­தள சந்தை நிறு­வ­னங்கள், அதி­ர­டி­யாக தள்­ளு­படி விலையில் பொருட்கள் விற்­பதால், சில்­லரை வணி­கர்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்பு குறித்து, நிதி­ய­மைச்­ச­ரிடம் விரி­வாக எடுத்­து­ரைத்தோம்.
பொருட்­களின் விலை, கடை­யிலும், வலை­த­ளத்­திலும் ஒரே மாதி­ரி­யாக இருக்க வேண்டும். அது தொடர்­பாக உறு­தி­யான, தெளி­வான கொள்­கையை மத்­திய அரசு உரு­வாக்க வேண்டும் என, தெரி­வித்­துள்ளோம்.சில்­லரை விற்­ப­னையில், அன்னிய நேரடி முத­லீ­டு­களால் ஏற்­பட்­டுள்ள தாக்கம் குறித்தும் விவ­ரித்தோம். எங்கள் கோரிக்­கை­களை பரி­சீ­லிப்­ப­தாக, அமைச்சர் தெரி­வித்து உள்ளார். இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)