பதிவு செய்த நாள்
23 அக்2016
05:56
புதுடில்லி:முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், செப்., 5ல், தொலை தொடர்பு சேவையை துவக்கியது. ஆனால், இந்நிறுவன வாடிக்கையாளர்கள், ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்வதில், இடையூறுகளை சந்தித்தனர்.
இதையடுத்து, மூன்று நிறுவனங்களும், தன் வாடிக்கையாளர்களுக்கு உள் இணைப்பு வசதியை கொடுக்க தவறியதாக, ஆர்ஜியோ, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, ‘டிராய்’யிடம் புகார் அளித்தது. இதை விசாரித்த டிராய், தொலை தொடர்பு விதிகளை மீறி, மூன்று நிறுவனங்களும், உள் இணைப்பை வழங்க தவறியது, ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது. ஆர்ஜியோ வாடிக்கையாளர் அழைப்பிற்கு இணைப்பு வழங்காத, மூன்று நிறுவனங்களுக்கும், 3,150 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.இதன்படி, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் தலா, 1,050 கோடி ரூபாய்; ஐடியா நிறுவனம், 950 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|