பதிவு செய்த நாள்
23 அக்2016
05:56
புதுடில்லி:டாடா மோட்டார்ஸ், அதிகளவில் புதிய வாகனங்களை விரைவாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. டாடா குழுமத்தை சேர்ந்த டாடா மோட்டார்ஸ், கார், பஸ் உள்ளிட்ட மோட்டார் வாகன உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், போட்டி மற்றும் சந்தையின் எதிர்பார்ப்புகள் காரணமாக, புதிய வாகனங்களை விரைவாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கியூன்டெர் பட்ஷெக் கூறியதாவது:எங்கள் நிறுவனத்தின், ஹெக்சா மாடல் எஸ்.யு.வி., வாகனம், சர்வதேச தரத்தில் உருவாகியுள்ளது. தற்போது, மோட்டார் வாகன சந்தை விரைவாக வளர்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக, எஸ்.யு.வி.,வாகனங்களுக்கு தேவை அதிகரித்து வருகிறது. எங்கள் நிறுவனம், புதிய வாகனங்களை அதிகளவில் விரைவாக அறிமுகம் செய்ய உள்ளது. அடுத்த ஆண்டு ஜன., மாதத்தில், ஒரு புதிய வாகனம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|