பதிவு செய்த நாள்
23 அக்2016
06:03
மும்பை:‘‘ஜவுளித் துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ள, ஊக்கச்சலுகை திட்டத்தில், கைவினை மற்றும் வீட்டு பயன்பாட்டு ஜவுளிகளும் சேர்க்கப்படும்,’’ என, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்து உள்ளார். மத்திய அரசு, ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் துறை வளர்ச்சிக்கு, 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான, ஊக்கச்சலுகை திட்டங்களை அறிவித்து உள்ளது. இத்திட்டத்தில், திரைச் சீலைகள், போர்வைகள், தலையணை உறைகள், மேசை விரிப்புகள், ‘எம்ப்ராய்டரி’ துணிகள் உள்ளிட்ட, வீட்டு பயன்பாட்டு ஜவுளிகள் மற்றும் கைவினை ஜவுளி ரகங்கள் இடம் பெறவில்லை.
இந்நிலையில், மும்பையில், விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில், ஸ்மிருதி இரானி பேசியதாவது:ஊக்கச்சலுகை திட்டத்தில், கைவினை ஜவுளி ரகங்கள், வீட்டு பயன்பாட்டு ஜவுளிகள் ஆகியவற்றையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்த அறிவிப்பு, தீபாவளி பண்டிகையின் போது வெளியாகும். ஆயத்த ஆடைகள் துறையை விட, கைவினை மற்றும் வீட்டு பயன்பாட்டு ஜவுளிகள் பிரிவு, அதிகளவில் தொழிலாளர்களை கொண்டதாக இல்லை.
இருந்த போதிலும், அப்பிரிவிற்கு ஊக்கச்சலுகைகளை விரிவுபடுத்துவதன் மூலம், குறிப்பிடத்தக்க புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.அதுமட்டுமின்றி, அப்பிரிவின் வளர்ச்சி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும், நுாலிழை, ஜவுளி ஆகியவற்றின் பயன்பாட்டை அதிகரிக்கவும் உதவும். நாட்டின் ஏற்றுமதியில், ஜவுளித் துறை முன்னணியில் உள்ளது பெருமை அளிக்கிறது. இத்துறையின் வளர்ச்சிக்கு, அனைத்து உதவிகளையும், மத்திய அரசு வழங்க தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|