மஹாராஷ்டிரா ஆரஞ்சு வரத்து அதிகரிப்புமஹாராஷ்டிரா ஆரஞ்சு வரத்து அதிகரிப்பு ... இந்திய சந்தையில் முதலிடத்தை தக்க வைக்க போராடும் சாம்சங் இந்திய சந்தையில் முதலிடத்தை தக்க வைக்க போராடும் சாம்சங் ...
விடைபெற்றது 'சஞ்சாயிகா':கேள்விக்குறியானது மாணவர்களின் சேமிப்பு பழக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2016
14:56

பள்ளிக்கூடத்துக்கு போக மறுத்து அடம்பிடித்தால் போதும், வழக்கமான பாக்கெட் மணியை விட, 50 பைசா கூடுதலாகவே கொடுத்து அனுப்புவார் அப்பா. வகுப்பறைக்குள் நுழைவதற்குள்ளே, மிட்டாய் வாங்குவதிலும், பயாஸ்கோப் வாங்குவதிலும் பாக்கெட் மணி கரைந்து விடும். சில குழந்தைகள் மட்டுமே அதை மண் உண்டியலில் சேமித்து வைப்பார்கள்.அலமாரியில் துவங்கி அக்காவின் ஜியாமெட்ரி பாக்ஸ் வரை, கிடைக்கும் சிறுசிறு தொகையை, சேமிப்பதற்கென்றே பள்ளிகளில், 'சஞ்சாயிகா' திட்டம் இருந்தது. கையில் காசு கிடைக்கும் போதெல்லாம், ஆசிரியரிடம் கொடுத்து, தங்கள் பெயரில் வரவு வைத்துக் கொள்வார்கள். இதில், மாணவர்களுக்கு பாஸ்புக் வசதி வேறு.இதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர், தினமும் சேரும் தொகையை, அருகிலுள்ள தபால்நிலையத்தில் மாணவர்கள் பெயரில் செலுத்தி விடுவார். சேமிப்புப் பணத்தை, ஆண்டு இறுதியிலோ அல்லது தேவைப்படும்போதோ எடுத்துக்கொள்ளலாம். இதற்கு, 3 சதவீத வட்டி கிடைக்கும். மாணவர்களால் மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்த இத்திட்டத்தினால், சிக்கனம், சேமிப்போடு சேர்ந்து நிர்வாகத் திறமையையும் மாணவர்களிடையே வளர்ந்தது.ஆனால் இன்று, ஆறாம் வகுப்பு படிக்கும் பையனுக்கு, 'சேவிங்ஸ் அக்கவுன்ட்' இருக்கிறதோ இல்லையோ, பேஸ்புக் அக்கவுன்ட் துவங்கியாகிவிட்டது. இப்படியொரு சூழலில், குழந்தைகளுக்கு சேமிப்பு பழக்கத்தை விதைத்த, 'சஞ்சாயிகா' திட்டம், வேரோடு பிடுங்கி எறியப்பட்டு விட்டது. ஒரு சில பள்ளிகளில் மட்டுமே நடைமுறையில் இருந்த இத்திட்டத்தை, அக்.,1 முதல் முழுவதுமாக நிறுத்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பை தபால்துறை வெளியிட்டுள்ளது.ஓய்வு பெற்ற தபால்துறை அலுவலர் ஹரிஹரன் கூறியதாவது:அப்போது எல்லாம், 10 பைசா, 25 பைசாவுக்கு 'சேவிங்ஸ் ஸ்டாம்ப்' கிடைக்கும். அந்த ஸ்டாம்புகளை சேகரித்து அட்டையில் ஒட்டி, தபால்நிலையங்களில் கொடுத்து கணிசமான தொகையை மாணவர்கள் சேமித்து வந்தனர். பின், 1970ல் மத்திய அரசின் தேசிய சேமிப்பு நிறுவனம் மூலம் பள்ளிகளில் 'சஞ்சாயிகா' திட்டம் துவங்கப்பட்டது.சேமிப்புக்கான அடிப்படையை மாணவர்கள் வளரும் பருவத்திலே கற்றுக்கொள்ள இத்திட்டம் அரிய வாய்ப்பாகவே இருந்தது. ஆனால், பல்வேறு கவர்ச்சிகர திட்டங்களால், 'சஞ்சாயிகா' திட்டம் அடியோடு முடங்கிவிட்டது. இந்த நுாற்றாண்டு துவக்கத்திலிருந்தே ஓரிரு பள்ளிகளை தவிர பெரும்பாலான பள்ளிகளில் இத்திட்டம் செயலிழந்து விட்டது என்பதே உண்மை.இவ்வாறு அவர், கூறினார்.கோவைபேரூர் தமிழ்க்கல்லுாரி, பேராசிரியர் ஞானப்பூங்கோதை கூறுகையில், ''உறவினர்கள் ஊர் திரும்பும்பொழுது, ஊர்க் காசு கொடுத்துச் செல்லும் பழக்கம் இருந்தது. மொத்தமாக சேரும் தொகையை, 'சஞ்சாயிகா' அட்டையில் வரவு வைக்கும் வரை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். சேமிப்பு தொகையை வைத்தே, சைக்கிளுக்கு காற்றடிப்பது, பஞ்சர் பார்ப்பது என்று அனைத்து தேவைகளையும் பூர்த்தியாகிவிடும். இன்று என் வீட்டு பட்ஜெட்டை திறமையாக கையாளுகிறேன் என்றால், அன்று கிடைத்த சேமிப்பு பழக்கமே முக்கிய காரணம். 'சஞ்சாயிகா'வின் இழப்பு இன்றைய தலைமுறையினருக்கு பேரிழப்பாகும்,'' என்றார்.மாணவன் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''தற்போது, பிளஸ் 2 படிக்கிறேன். ஒன்றாம் வகுப்பு முதல், 'சஞ்சாயிகா' சேமிப்பு திட்டத்தில் சேகரித்து வருகிறேன். தினமும், அப்பா கொடுக்கும் பத்து ரூபாயை, உண்டியலில் சேர்த்து வைத்து, அதை அப்படியே எண்ணிப்பார்க்காமல் பள்ளியில் செலுத்தி விடுவேன். பள்ளியிலிருந்து வெளியேறும்போது கணக்கு முடிக்கலாம் என்றிருந்தேன். அதற்கான வாய்ப்பை தபால்துறையே ஏற்படுத்தியதால், வேதனையாக உள்ளது,'' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)