‘அனை­வ­ருக்கும் வீடு’ திட்­டத்தால் பூட்டு விற்­பனை அதி­க­ரிக்கும்‘அனை­வ­ருக்கும் வீடு’ திட்­டத்தால் பூட்டு விற்­பனை அதி­க­ரிக்கும் ... ஜவுளி ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்க புதிய சந்­தை­களை ஈர்க்க மத்­திய அரசு திட்டம் ஜவுளி ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்க புதிய சந்­தை­களை ஈர்க்க மத்­திய அரசு ... ...
பங்­குச்­சந்தை பாது­காப்பை பலப்­ப­டுத்த ‘செபி’ முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2016
23:10

புது­டில்லி : பங்­குச்­சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’ கணினி நாச­கா­ரர்­களால் பங்­குச்­சந்தைகள் பாதிக்­கப்­ப­டா­ம­லிருக்க, அவற்றின் பாது­காப்பை பலப்­ப­டுத்த முடிவு செய்­துள்­ளது.
சமீ­பத்தில், 32 லட்சம் வங்கி, ஏ.டி.எம்., கார்­டு­களின் தக­வல்கள், ‘ஹேக்கர்ஸ்’ எனப்­படும், கணினி நாச­கா­ரர்­களால் திரு­டப்­பட்­டது அம்­ப­ல­மாகி, அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது. இந்த, ‘சைபர்’ தாக்­கு­தலை தொடர்ந்து, பல வங்­கிகள், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, ஏ.டி.எம்., கார்டு ரக­சிய எண்ணை மாற்­று­மாறு அறி­வு­றுத்தி உள்ளன. ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா, ஆறு லட்சம், ‘டெபிட்’ கார்­டு­களை முடக்கி, புதிய கார்­டு­களை வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கு­வ­தாக அறிவித்துள்­ளது.
இந்­நி­லையில், செபியின் மூத்த அதி­காரி ஒருவர் கூறி­ய­தாவது:செபியின் கீழ், பங்­குச்­சந்­தைகள், தரகு நிறு­வ­னங்கள், முத­லீட்டு நிறு­வ­னங்கள், பரஸ்­பர நிதி­யங்கள் உட்­பட, பல்வேறு முக்­கிய நிதி அமைப்­புகள் உள்­ளன. இவற்றின் அன்­றாட நட­வ­டிக்­கை­களில் பாதிப்பு ஏற்­பட்டால், அதன் தாக்கம் அனைத்து துறை­க­ளிலும் எதி­ரொ­லிக்கும். எனவே, செபி, அதன் கணினி ஒருங்­கி­ணைப்பை பலப்­ப­டுத்த, தலைமை தகவல் தொழில்­நுட்ப பாது­காப்பு அதி­கா­ரியை நிய­மிக்க உள்­ளது. அவர், சைபர் பாது­காப்பை பலப்­ப­டுத்தும் பணி­களை மேற்­கொள்வார். அதற்­கான வேலைகள், ஏற்­க­னவே துவங்கி விட்­டன.
இந்­நி­லையில், தற்­போது, ஏ.டி.எம்., தகவல் திருட்டு வெளி­யா­னதை அடுத்து, நிய­மனப் பணியை விரைந்து முடிக்­கவும், புதிய, வலு­வான பாது­காப்பு கொள்­கையை உரு­வாக்­கவும், செபி தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளது. முன்­னே­றிய நாடுகள் பின்­பற்றும், மிகவும் பாது­காப்பு நடை­மு­றை­களை அறி­மு­கப்­படுத்­தவும்; சர்­வ­தேச அளவில், தகவல் தொழில்­நுட்பம் மற்றும் சைபர் பாது­காப்பு வல்­லு­னர்­களின் ஆலோ­ச­னை­களை பெற்று, அவற்றை செயல்­ப­டுத்­தவும் முடிவு செய்­துள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)