பதிவு செய்த நாள்
27 அக்2016
07:38
புதுடில்லி : ‘இந்தியாவில், கார்ப்பரேட் நிறுவனங்கள், குறிப்பிட்ட பணிகளுக்கு, குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில், வல்லுனர்களை நியமிப்பது அதிகரித்து வருகிறது’ என, பிளக்சிங் இட் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தற்காலிகமாக
அதன் விபரம்: குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் வலைதளங்களில் புதிய தொழில்களில் ஈடுபடும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களில், 50 சதவீதம் பேர், ஒப்பந்த அடிப்படையில், குறிப்பிட்ட காலத்திற்கு பணி அமர்த்தப்படுகின்றனர். உதாரணமாக, சந்தைப்படுத்தும் பிரிவில், 21 சதவீதம் பேர், பகுதி நேர ஒப்பந்தப் பணியாளர்களாக உள்ளனர். இது, கருத்துருவாக்கம், வடிவமைப்பு மற்றும் விற்பனை பிரிவில், தலா, 17 சதவீதமாக உள்ளது. அது போல, பன்னாட்டு நிறுவனங்கள், நிதி துறையில், 26 சதவீத வல்லுனர்களை, குறிப்பிட்ட பணிகளுக்காக, ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியமர்த்துகின்றன. இது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனை பிரிவில், தலா, 15 சதவீதமாக உள்ளது.
ஒப்பந்த அடிப்படையில்
இத்தகைய போக்கை, தற்போது இந்தியாவின் கார்ப்பரேட் நிறுவனங்களும் பின்பற்ற துவங்கியுள்ளன. அவை, புதிய திட்டங்களுக்கு, வடிவமைப்பு, ஆலோசனை உள்ளிட்ட பணிகளுக்காக, ஒப்பந்த அடிப்படையில் வல்லுனர்களை நியமிக்கின்றன. இதன் மூலம், அவை பணியாளர் செலவினத்தை கணிசமாக குறைத்துக் கொள்கின்றன. இந்தாண்டு, ஏப்., – செப்., வரையிலான ஆறு மாதங்களில், கார்ப்பரேட் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 61 சதவீத அளவிற்கு, மூன்று மாத பணிகளுக்கான வல்லுனர்களின் தேவை இருந்தது, தெரிய வந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|