பணி நிய­ம­னத்தில் பெரிய நிறு­வ­னங்­களின் புதிய போக்குபணி நிய­ம­னத்தில் பெரிய நிறு­வ­னங்­களின் புதிய போக்கு ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 66.92 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 66.92 ...
ஊட்­டச்­சத்து உணவு வகை­க­ளுக்கு விரைவில் தர நிர்­ணய விதி­முறை அம­லா­கி­றது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2016
07:38

புது­டில்லி : மக்­களின் ஆரோக்­கி­யத்­திற்கு பாது­காப்­பான, தர­மான, உணவு வகைகள் கிடைப்­பதை உறுதி செய்யும் நோக்கில், மத்­திய அரசு, ஊட்­டச்­சத்து உண­வு­களுக்கு, புதிய தர நிர்­ணய விதி­மு­றை­களை, விரைவில் அமல்­ப­டுத்த உள்­ளது.
இந்­திய உணவு பாது­காப்பு மற்றும் தரக் கட்­டுப்­பாட்டு ஆணையம், கடந்த ஆண்டு, ஊட்­டச்­சத்து உண­வு­க­ளுக்­கான தர நிர்­ணய பாது­காப்பு விதி­மு­றை­களை உரு­வாக்­கி­யது. ‘‘இந்த தர நிர்­ணய வரை­வ­றிக்கை, மத்­திய அரசின் ஒப்­பு­த­லுடன், விரைவில் வெளி­யி­டப்­படும்,’’ என, உணவு பாது­காப்பு மற்றும் தர நிர்­ணய ஆணை­யத்தின் தலைமை செயல் அதி­காரி, பவன் குமார் தெரி­வித்து உள்ளார்.
அவர், மேலும் கூறி­ய­தா­வது: இந்­தி­யாவில், மக்­க­ளிடம் நேர­டி­யாக பொருட்­களை விற்­பனை செய்யும், 60 சத­வீத நிறு­வ­னங்கள், ஊட்­டச்­சத்து உணவு வகை­களின் வர்த்­த­கத்தில் ஈடு­பட்­டுள்­ளன. இந்த நேரடி விற்­பனை நிறு­வ­னங்கள், 40 லட்சம் வினி­யோ­கஸ்­தர்கள் மூலம், ஊட்­டச்­சத்து உண­வு­களை, மக்­க­ளிடம் நேர­டி­யாக விற்­கின்­றன. ஆகவே, இந்­நி­று­வ­னங்கள், பாது­காப்­பான ஊட்­டச்­சத்து உண­வுகள் குறித்து, மக்­க­ளிடம் விழிப்­பு­ணர்வு ஏற்படுத்த வேண்டும். அதே­ச­மயம், இந்­நி­று­வ­னங்கள் விற்­பனை செய்யும் ஊட்­டச்­சத்து உண­வு­களின் தரம், இந்­திய உணவு பாது­காப்பு மற்றும் தர நிர்­ணய ஆணையம் நிர்­ண­யித்­துள்ள, அள­வு­கோல்­படி இருக்க வேண்டும்.
இந்­தி­யாவைச் சேர்ந்த, 130 கோடி மக்­க­ளுக்கு பாது­காப்­பான, ஊட்­டச்­சத்து உண­வுகள் கிடைப்­பதை உறுதி செய்யும் பொறுப்பு, எங்­க­ளுக்கு உள்­ளது. அத­ன­டிப்­ப­டையில், ஊட்­டச்­சத்து உண­வு­க­ளுக்­கான தர நிர்­ணய விதி­மு­றைகள் உரு­வாக்­கப்­பட்டு உள்ளன.இவ்­வாறு அவர் கூறினார்.
நேரடி விற்­பனை நிறு­வ­னங்கள் கூட்­ட­மைப்பின் தலைவர்,ஜிதேந்­திர ஜகோடா கூறி­ய­தா­வது: இந்­தி­யாவில், நேரடி விற்­பனை துறைக்கு, பிர­கா­ச­மான வளர்ச்சி வாய்ப்பு உள்­ளது. இத்­து­றையில், பெண்கள் பெரும்­பான்­மை­யாக உள்­ளனர்; அதி­க­ளவில், ஆண்­க­ளுக்கும் வர்த்­தக வாய்ப்­பு­களை வழங்கும் இலக்­குடன் செயல்­பட்டு வரு­கிறோம். நேரடி விற்­பனை துறையின் சந்தை மதிப்பு, 2019 – 20ம் நிதி­யாண்டில், 15 ஆயிரம் கோடி ரூபா­யாக உயரும்; 90 லட்­சத்­திற்கும் அதி­க­மா­னோ­ருக்கு, வர்த்­தக வாய்ப்­பு­களை வழங்கும். இவ்­வாறு அவர் கூறினார்.
பக்­க­வி­ளை­வுகள் உடல் பரு­மனை குறைப்­ப­தாக கூறும், பல்­வேறு ஊட்­டச்­சத்து உண­வுகள், பயங்­க­ர­மான பக்­க­வி­ளை­வு­களை ஏற்­ப­டுத்­து­வ­தாக புகார்கள் எழுந்­துள்­ளன. உணவு பாது­காப்பு மற்றும் தர நிர்­ணய ஆணை­யத்தின் புதிய விதி­மு­றைகள் அம­லுக்கு வந்தால், ஊட்­டச்­சத்து உண­வு கள் என்ற பெயரில், உட­லுக்கு ஊறு விளை­விக்கும் உணவுப் பொருட்­களின் விற்பனை முடி­வுக்கு வரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)