பதிவு செய்த நாள்
28 அக்2016
12:20
உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த, ஓட்டல் உரிமையாளருடன், விலை கண்காணிப்பு குழு பேச்சு நடத்த உள்ளது. அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியா வசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த, தமிழக அரசு கண்காணிப்பு குழுவை நியமித்துள்ளது. அதில், உணவு, கூட்டுறவு, நிதி மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் உள்ளனர். தற்போது, சென்னை உட்பட பல நகரங்களில் உள்ள பெரிய ஓட்டல்களில், இரண்டு இட்லி, 30 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. மற்ற பொருட்களும், அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.எனவே, ஓட்டல்களில் உணவு பொருள் விலையை கட்டுப்படுத்த, உரிமையாளர்களுடன் பேச்சு நடத்த, விலை கண்காணிப்பு குழு முடிவு செய்துள்ளது.இது குறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது, சாதாரண ஓட்டலில் இரண்டு இட்லி, 25 ரூபாய்; உயர்தர சைவ உணவகங்களில், 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவே, உள்ளாட்சி அமைப்புகள், 'அம்மா' உணவகங்களை துவக்கின. அதற்கு, ஏழைகளிடம் வரவேற்பு உள்ளது; நடுத்தர பிரிவினர் செல்வதில்லை. தற்போது, காய்கறி, அரிசி, சமையல் காஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது. இதனால், மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, ஓட்டல் உரிமையாளர்களுடன் பேச்சு நடத்த உள்ளோம். நடுத்தர ஓட்டல்களில், இரண்டு இட்லி விலை, 20 ரூபாய்; உயர்தர ஓட்டல்களில், 30 ரூபாய்க்குள் விற்க நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற பொருட்களின் விலையை குறைக்கவும் வலியுறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|