விளைச்சல் அமோகம் : சரியுது வாழைப்பழ விலைவிளைச்சல் அமோகம் : சரியுது வாழைப்பழ விலை ... காலாண்டு முடிவுகள் காலாண்டு முடிவுகள் ...
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 50 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2016
13:38

புதுடில்லி : இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 50 சதவீதம் உயர்ந்திருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.தரத்தில் சிறந்து விளங்கினாலும் விலை அதிகமென்பதால் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்கள் இதுவரை குறைவான அளவிலேயே விற்பனையாகி வந்தன. ஆனால் கடந்த ஒரே வருடத்தில் மட்டும் சுமார் 25 லட்சம் ஆப்பிள் ஐபோன்கள் இந்தியாவில் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது 2015-2016-ம் ஆண்டில் மட்டும் ஐபோன்கள் விற்பனை 50 சதவீதம் இந்தியாவில் அதிகரித்துள்ளது.உலகின் மிகப்பெரிய சந்தையாக விளங்கும் இந்தியாவில் விற்பனையை மேலும் அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் இதுகுறித்து கூறுகையில் "இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 50 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் இளைய தலைமுறையினர் 4ஜி சேவையை நோக்கி முன்னேறி வருகின்றனர். இதனால் ஸ்மார்ட் போன்களுக்கான தேவை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. ஐபோன் விற்பனையை இந்தியாவில் அதிகரிக்கும் வகையில் ரிலையன்ஸ் ஜியோவுடன் இணையத் திட்டமிட்டு வருகிறோம்" என்றார். இந்தியாவில் உள்ள 50 சதவீதம் பேர் 25 வயதுக்கும் குறைவானவர்களாக இருப்பதால் ஐபோன் விற்பனைக்கான தேவை அதிகரித்து வருகிறது. மேலும் ஸ்மார்ட் போன் விற்பனையில் இந்தியாவின் நம்பர் 1 கம்பெனியாக விளங்கும் சாம்சங்கின் கேலக்சி நோட் 7 போன்கள் தீப்பிடித்து எரிந்ததால் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி இந்தியாவில் வலுவாகக் காலூன்றிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)