சுங்க கட்டணம் ரத்து: ரூ.150 கோடி இழப்புசுங்க கட்டணம் ரத்து: ரூ.150 கோடி இழப்பு ... அடுத்த ஆண்டு செப்டம்பர் முதல் ஜிஎஸ்டி அமல் : அருண்ஜெட்லி அடுத்த ஆண்டு செப்டம்பர் முதல் ஜிஎஸ்டி அமல் : அருண்ஜெட்லி ...
விரைவில் புதிய ரூ.1000 நோட்டுக்கள் : நிதித்துறை செயலாளர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2016
12:17

புதுடில்லி : நவம்பர் 8 ம் தேதி நள்ளிரவு முதல் வாபஸ் பெறப்பட்ட ரூ.1000 நோட்டுக்கள், புதிய வடிவில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
கறுப்பு பணத்தை வெளி கொண்டு வருவதற்காகவும், ஒழிப்பதற்காகவும் நவம்பர் 8 ம் தேதி நள்ளிரவு முதல் ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதனையடுத்து நேற்று வங்கிகள் மற்றும் ஏடிஎம்.,க்கள் மூடப்பட்டன. இன்று (நவம்பர் 10) புதிய ரூ.500 மற்றும் 2000 நோட்டுக்கள் அறிமுகத்துடன் வங்கிகள் மீண்டும் திறக்கப்பட்டன. மக்கள் வங்கிகளில் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து, அத்துடன் 16 அடையாள சான்றுகளில் ஏதாவது ஒன்றின் ஜெராக்ஸ் இணைத்து தங்களிடம் உள்ள பழைய ரூ.500 மற்றும் 1000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டது.
மக்கள் தங்களிடம் இருந்த ரூ.500 மற்றும் 1000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ள வங்கிகளில் குவிந்தனர். 


இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்ததாஸ், வாபஸ் பெறப்பட்ட ரூ.1000 நோட்டுக்கள் புதிய வடிவில் சில மாதங்களில் மீண்டும் அறிமுகம் செய்யப்படும். அனைத்து ரூபாய் நோட்டுக்களிலும் மாற்றம் கொண்டு வரப்படும். அதேசமயம், தற்போது புழக்கத்தில் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுக்களும் செல்லும். புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரூ.2000 நோட்டுக்களின் பயன்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்படும். 

2 நாட்களுக்கு பிறகு மீண்டும் நாளை ஏடிஎம்.,க்கள் திறக்கப்படும் போது ரூ.100 நோட்டுக்கள் மட்டுமே கிடைக்கும். ரூ.2000 நோட்டுக்கள் கிடைக்காது. ரூ.2000 நோட்டுக்களின் வடிவத்திற்கு ஏற்ப ஏடிஎம் இயந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, அதன் பிறகு ஏடிஎம்.,களில் ரூ.2000 நோட்டுக்கள் கிடைக்கும் என்றார். வங்கி அதிகாரிகள் உரிய ஆவணங்களுடன் பணத்தை எடுத்துச் செல்லுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)