பதிவு செய்த நாள்
10 நவ2016
12:17
புதுடில்லி : நவம்பர் 8 ம் தேதி நள்ளிரவு முதல் வாபஸ் பெறப்பட்ட ரூ.1000 நோட்டுக்கள், புதிய வடிவில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
கறுப்பு பணத்தை வெளி கொண்டு வருவதற்காகவும், ஒழிப்பதற்காகவும் நவம்பர் 8 ம் தேதி நள்ளிரவு முதல் ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதனையடுத்து நேற்று வங்கிகள் மற்றும் ஏடிஎம்.,க்கள் மூடப்பட்டன. இன்று (நவம்பர் 10) புதிய ரூ.500 மற்றும் 2000 நோட்டுக்கள் அறிமுகத்துடன் வங்கிகள் மீண்டும் திறக்கப்பட்டன. மக்கள் வங்கிகளில் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து, அத்துடன் 16 அடையாள சான்றுகளில் ஏதாவது ஒன்றின் ஜெராக்ஸ் இணைத்து தங்களிடம் உள்ள பழைய ரூ.500 மற்றும் 1000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டது.
மக்கள் தங்களிடம் இருந்த ரூ.500 மற்றும் 1000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ள வங்கிகளில் குவிந்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|