பதிவு செய்த நாள்
10 நவ2016
15:09
புதுடில்லி : 2017 ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் புதிய சேவை வரியை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ளார். தொடர்ந்து ரூ.500, 1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டது குறித்து பேசிய அவர், நாட்டு நலனுக்காக அரசு இந்த துணிச்சலான நடவடிக்கையை எடுத்துள்ளது. முடிவை எடுக்க மத்திய அரசு பயப்படவில்லை. ரூபாய் நோட்டு வாபஸ் மிக முக்கியமான நடவடிக்கை . அரசின் முடிவு எடுக்கும்ஆற்றலை நிலைநிறுத்துவது சவாலானது வங்கிகளில் சிறிய அளவில் டெபாசிட் செய்பவர்களுக்கு பாதிப்பு இருக்காது. மக்களின் அவசர தேவைக்கான பணத்தேவையை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்.
அதிகளவில் கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் தான் கவலைப்பட வேண்டும். சில நாட்களுக்கு சிறிய தொகை செலவிடுபவர்களுக்கு பிரச்னைகள் இருக்கலாம். போதிய அவகாசம் இருப்பதால் மக்கள் கவலைப்பட தேவையில்லை. தேவைக்கேற்ப வங்கிகளின் வேலை நேரத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பணத்தை மாற்றிக்கொள்ள வார இறுதி நாட்களிலும் வங்கி திறந்திருக்கும்.இந்த நடவடிக்கை நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும். பழைய நோட்டுகளை விரைவாக மாற்றித்தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
வரிகளை அமல்படுத்துவது தொடர்பாக பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில் சில செப்டம்பர் 16ம் தேதிக்கு பிறகு காலாவதி ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அதற்கு முன் ஜிஎஸ்டி உள்ளிட்டவைகள் நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|