விரைவில் புதிய ரூ.1000 நோட்டுக்கள் : நிதித்துறை செயலாளர்விரைவில் புதிய ரூ.1000 நோட்டுக்கள் : நிதித்துறை செயலாளர் ... மாலை நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 குறைவு மாலை நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 குறைவு ...
அடுத்த ஆண்டு செப்டம்பர் முதல் ஜிஎஸ்டி அமல் : அருண்ஜெட்லி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2016
15:09

புதுடில்லி : 2017 ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் புதிய சேவை வரியை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ளார். தொடர்ந்து ரூ.500, 1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டது குறித்து பேசிய அவர், நாட்டு நலனுக்காக அரசு இந்த துணிச்சலான நடவடிக்கையை எடுத்துள்ளது. முடிவை எடுக்க மத்திய அரசு பயப்படவில்லை. ரூபாய் நோட்டு வாபஸ் மிக முக்கியமான நடவடிக்கை . அரசின் முடிவு எடுக்கும்ஆற்றலை நிலைநிறுத்துவது சவாலானது வங்கிகளில் சிறிய அளவில் டெபாசிட் செய்பவர்களுக்கு பாதிப்பு இருக்காது. மக்களின் அவசர தேவைக்கான பணத்தேவையை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்.
அதிகளவில் கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் தான் கவலைப்பட வேண்டும். சில நாட்களுக்கு சிறிய தொகை செலவிடுபவர்களுக்கு பிரச்னைகள் இருக்கலாம். போதிய அவகாசம் இருப்பதால் மக்கள் கவலைப்பட தேவையில்லை. தேவைக்கேற்ப வங்கிகளின் வேலை நேரத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பணத்தை மாற்றிக்கொள்ள வார இறுதி நாட்களிலும் வங்கி திறந்திருக்கும்.இந்த நடவடிக்கை நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும். பழைய நோட்டுகளை விரைவாக மாற்றித்தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
வரிகளை அமல்படுத்துவது தொடர்பாக பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில் சில செப்டம்பர் 16ம் தேதிக்கு பிறகு காலாவதி ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அதற்கு முன் ஜிஎஸ்டி உள்ளிட்டவைகள் நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)