பதிவு செய்த நாள்
17 நவ2016
11:51
கம்பம்: பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து கேரளாவில் தினமும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு நடைபெறும் ஏலக்காய் ஏலம், இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது.கேரளா, இடுக்கி மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது.
இதில் ஈடுபட்டுள்ளோரில் 90 சதவீதம் பேர் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கை சேர்ந்தவர்கள். ஏலக்காய் ஏல மையங்களில் பதிவு செய்து விற்பனை செய்யப்படுகிறது. ஸ்பைசஸ் வாரியத்தின் (நறுமணபொருட்கள் வாரியம்) அனுமதி பெற்ற ஏலக் கம்பெனிகள் காய்களை பதிவு செய்வர். அந்த வாரியத்தில் பதிவு செய்த விற்பனையாளர்கள் கொள்முதல் செய்வர்.கேரளாவில் கம்பம்மெட்டு அருகில் உள்ள புத்தடி, தமிழகத்தில் போடி ஆகிய இடங்களில் ஸ்பைசஸ் வாரியத்தின் ஏலக்காய் ஏலமையம் உள்ளது. வாரத்தின் ஏழு நாட்களும், ஒரு நாளைக்கு காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் இரண்டு கம்பெனிகள் ஏலம் நடத்தும். தினமும் சராசரியாக ஒரு லட்சம் கிலோ வரை ஏலக்காய் பதிவு செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்படும்.
இந்த சீசனில் விளைச்சல் குறைவாக உள்ளதால் விலை கிலோவிற்கு ரூ. ஆயிரத்து 300 க்கும் மேல் போனது. தினமும் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நடைபெறும்.பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததால் ஏலக்காய் வர்த்தகம் ஸ்தம்பித்துள்ளது. இதனால் நவ. 10 ம் தேதி ஏலம் நிறுத்தப்பட்டது. ஆனால் மறுநாளே மீண்டும் வழக்கம் போல நடந்தது. ஆனால் அதனை தொடர முடியவில்லை. பணப்பட்டுவாடா செய்ய முடியாததே அதற்கு காரணம்.வங்கிக் கணக்கில் வரவு வைத்தாலும் விவசாயிகளால் பணத்தை எடுக்க முடியவில்லை. அதனால் ஏலத்தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர் கூலி வழங்குவதிலும், பராமரிப்பு செலவுகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் வங்கியில் பணத்தை போட வேண்டாம் என்று வலியுறுத்துகின்றனர். இதன் காரணமாக என்ன செய்வதென்று தெரியாமல் ஏலக்கம்பெனிகள் திணறின. இப்பிரச்னையால் நேற்று முன்தினம் முதல் ஏலக்கம்பெனிகள் தங்கள் வர்த்தகத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
இதனால் 6 ஏலங்கள் நடைபெறவில்லை.ஏலக் கம்பெனி பணியாளர்கள் தெரிவித்ததாவது: ' பணப்பிரச்னையால் வேறுவழியின்றி வர்த்தகத்தை நிறுத்திவிட்டோம். கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விலைகுறைந்து வருவதால் விவசாயிகளும் தோட்டங்களில் காய் எடுப்பதை நிறுத்திவிட்டனர், என்றனர்.
இதற்கிடையே நவ. 24 ல் இது குறித்து விவாதிக்க எர்ணாகுளத்தை தலைமையிடமாக கொண்ட ஸ்பைசஸ் வாரியம், ஏல கம்பெனிகள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகளை அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|