‘நெட் பேங்கிங்’ அறிந்து கொள்ள வேண்­டி­யவை!‘நெட் பேங்கிங்’ அறிந்து கொள்ள வேண்­டி­யவை! ... டெபாசிட்  வட்டி விகிதத்தை 1.9 சதவீதம் வரை குறைத்தது எஸ்பிஐ டெபாசிட் வட்டி விகிதத்தை 1.9 சதவீதம் வரை குறைத்தது எஸ்பிஐ ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நாட்டின் முதல் பேமென்ட் வங்கியை துவக்குகிறது ஏர்டெல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2016
14:53

மும்பை : நாட்டின் முதல் பேமென்ட் வங்கியை ஏர்டெல் நிறுவனம் ராஜஸ்தானில் துவங்கி உள்ளது. ஏர்டெல் பேமென்ட் வங்கியில் கணக்கும் வைக்கும் வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீதம் வட்டி வழங்கப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள வங்கிகளிலேயே அதிகபட்ச வட்டி விகிதம் இதுவாகும். தற்போது வரை பெரும்பாலான வங்கிகள் 4 சதவீதம் மட்டுமே வட்டி அளித்து வருகின்றன.
இதற்கு முன் ஏர்டெல் வாலட் முறையிலான 'ஏர்டெல் மணி' என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. முதல் பேமென்ட் வங்கிக்கான அனுமதியை ரிசர்வ் வங்கி அளித்ததை அடுத்து தற்போது பேமென்ட் வங்கி சேவையிலும் ஏர்டெல் அடியெடுத்து வைத்துள்ளது. இது பற்றி ஏர்டெல் பேமென்ட் வங்கியின் சிஇஓ சசி அரோரா கூறுகையில், வங்கி சேவை என்ற மிகப் பெரிய திட்டத்தின் மூலம் அடுத்த கட்டத்திற்கு பயணித்துள்ளோம். முதல்கட்டமாக சோதனை நடவடிக்கையாக ராஜஸ்தானில் இந்த வங்கி துவங்கப்பட்டுள்ளது. படிப்படியாக இது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றார்.
ஏர்டெல் பேமன்ட் வங்கியில் பணத்தை சேமிக்க மட்டுமே முடியும். ஏடிஎம் அல்லது டெபிட் கார்டுகள் வழங்கப்பட மாட்டாது. குறிப்பிட்ட சில ஏர்டெல் கிளைகளில் மட்டும் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொள்ளலாம். பேமென்ட் வங்கி என்பது ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனின் கனவு திட்டமாக இருந்தது.
ஏர்டெல் பேமன்ட் வங்கியில் கணக்கு துவங்குவோருக்கு ஏர்டெல் மொபைல் இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த மொபைல் எண், வங்கி கணக்கு எண்ணாக கருதப்படுகிறது. இந்த வங்கியின் செயல்பாடு முற்றிலும் டிஜிட்டல் மயமாகவும், பேப்பர் இல்லாததாகவும் அமைக்கப்பட உள்ளது. கணக்கு துவங்குவதும் ஆதார் அடிப்படையிலான இ கேஒய்சி முறையிலேயே துவங்கப்பட உள்ளது. ஏர்டெல் வங்கி சேவைகள் அனைத்தும் ஏர்டெல் மொபைல் ஆப்ஸ் வாயிலாகவே வழங்கப்பட உள்ளது. சந்தேகங்கள் பெறுவதற்கு 400 என்ற எண்ணிற்கு போன் செய்தால், வாய்ஸ் சேவை மூலமே கலந்துரையாடல் நடத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)