பதிவு செய்த நாள்
02 டிச2016
13:42
புதுடில்லி : மத்திய அரசு ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெற்றதாக அறிவித்ததை அடுத்து, ஆட்டோ துறையில் சில்லரை விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. இதனால் நவம்பர் மாதத்தில் மொத்தமாக கார் விற்பனை செய்து, டெலிவரி செய்வதும் குறைந்து விட்டது.
தற்போதுள்ள நிலையில் இருந்து முழுமையாக மீண்டு வர இன்னும் சில மாதங்கள் ஆகும் என தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சரிந்த கார் விற்பனையை மீண்டும் சரி செய்வதற்காக டிசம்பர் மாதத்தில் சில சலுகைகளை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. புத்தாண்டு, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்கள் துவங்குவதால், டிசம்பர் மாதத்தில் சலுகையை அறிவிப்பது பொருத்தமாக இருக்கும் என கூறப்படுகிறது.
மாருதி நிறுவனம் பிரிசா மினி எஸ்யுவி ரக காரை அறிமுகம் செய்திருந்த போதிலும் நவம்பரில் அந்நிறுவனத்தின் கார் விற்பனை வளர்ச்சி 14 சதவீதம் என்ற விகிதத்திலேயே உள்ளது. அதேசமயம் மகேந்திரா அன் மகேந்திரா, ஹோண்டா கார்ஸ் இந்தியா போன்ற நிறுவனங்கள் எதிர்மறையான வளர்ச்சியையே பெற்றுள்ளன.
ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பிற்கு பிறகு, முதல் 3 முதல் 4 நாட்களில் இருசக்கர வாகன விற்பனை 50 சதவீதம் வரை சரிவடைந்தது. ஆனால் 2வது வாரத்தில் ஹோண்டா நிறுவன விற்பனை சகஜ நிலையை எட்டியது. தெற்கு, மேற்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் 80 சதவீதம் வரை நிலைமை சீரடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|