பதிவு செய்த நாள்
06 டிச2016
03:33
புதுடில்லிகெய்ர்ன் இந்தியா நிறுவனம், உற்பத்தி அளவை அதிகரிப்பதற்காக, 30 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கிறது.கெய்ர்ன் இந்தியா நிறுவனம், நாளொன்றுக்கு, 1 லட்சம் பீப்பாய் என்ற அளவுக்கு அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், 30 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் நிறுவனர், அனில் அகர்வால் கூறியதாவது:எங்கள் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 1 லட்சம் பீப்பாய் என்ற அளவுக்கு அதிகரிக்க முடிவு செய்திருக்கிறோம். இதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளில், 30 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கிறோம். ராஜஸ்தான் எண்ணெய் வயலில் இந்த முதலீடு செய்யப்படும்.
மேலும், எங்களது தாய் நிறுவனமான வேதாந்தாவுடனான இணைப்பு அனேகமாக வரும் மார்ச் இறுதிக்குள் முடிந்து விடும் என எதிர்ப்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் கெய்ர்ன் இந்தியாவின் உற்பத்தி,2 லட்சத்து, 6 ஆயிரத்து, 230 பீப்பாய் ஆகும். இதில், 1 லட்சத்து, 67 ஆயிரத்து, 699 பீப்பாய் ராஜஸ்தானிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டதாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|