பதிவு செய்த நாள்
06 டிச2016
03:34
புதுடில்லிகாதி மற்றும் கிராம தொழில் ஆணையம், 6.18 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து, சாதனை படைத்திருக்கிறது.அண்மையில், டில்லியில் நடைபெற்ற, சர்வதேச வர்த்தக கண்காட்சியின்போது, காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம், தன் தயாரிப்புகளை, 6.18 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து உள்ளது.
இந்த கண்காட்சியின் போது, எஸ்.பி.ஐ., வங்கியுடன் இணைந்து, 180 இடங்களில், ‘பாயின்ட் ஆப் சேல்’ எனப்படும் பணப் பரிவர்த்தனைக்கான இயந்திரத்தை நிறுவியது காதி. செல்லாத நோட்டு அறிவிப்பால் ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாடு பிரச்னைகளை சமாளிக்கும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கடந்த ஆண்டு நடைபெற்ற விற்பனையுடன் ஒப்பிடும் போது, 123.15 சதவீதம் அதிக விற்பனையை இந்த ஆண்டு எட்டிஉள்ளது காதி.மேலும், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து, அதன், 10,283 ஊழியர்களுக்கு, 30 சதவீதம் வரையிலான தள்ளுபடியையும் அறிவித்துள்ளது காதி.
இது குறித்து, காதி நிறுவனத்தின் தலைவர், வி.கே.சக்சேனா கூறியதாவது:பவர் கிரிட் நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள இந்த ஒப்பந்தம் இரு தரப்புக்கும் பயனுள்ளதாக இருக்கும். கடந்த ஆண்டை விட அதிகமாக விற்பனை செய்திருக்கிறோம். விற்பனையை அதிகரிக்க இன்னும் பல முயற்சிகள் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|