பதிவு செய்த நாள்
07 டிச2016
05:11
புதுடில்லி:இந்தியாவில், இணையத்தை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை, 60 கோடியாக உயரும் என, அசோசெம் – டெலாய்ட் ஆய்வு தெரிவித்து உள்ளது.
இந்த ஆய்வில், மேலும் தெரிவித்துள்ளதாவது:இந்தியாவில், ‘3ஜி, 4ஜி’ வரவுகளால், இணையத்தை உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தற்போது, 34 கோடியே, 30 லட்சமாக இருக்கும் இந்த எண்ணிக்கையானது, 2020ல், 60 கோடியாக உயரும். ஸ்பெக்ட்ரம் எனப்படும், அலைக்கற்றை வசதியை பொறுத்தவரை, வளர்ந்த நாடுகளோடு, நம் பெருநகரங்களை ஒப்பிடும் போது, பத்தில் ஒரு பங்கு கூட கிடைக்கவில்லை. இது, இணையத்தின் வேகத்தை அதிகரிப்பதற்கும், பொது இடங்களில், வை – பை வசதி கிடைப்பதையும் தடுக்கும் தடையாக இருக்கிறது. உலகளவில், 150 பேருக்கு ஒரு, வை – பை ஹாட்ஸ்பாட் இருக்கிறது. இந்தியாவில், அதே அளவை எட்ட, 80 லட்சம் ஹாட்ஸ்பாட்டுகள் தேவைப்படுகின்றன. ஆனால், தற்போது, 31 ஆயிரம் ஹாட்ஸ்பாட்டுகள் தான் இருக்கின்றன.
இன்னும், 55 ஆயிரம் கிராமங்களை, மொபைல் போன் வசதி சென்றடையவில்லை. அங்கு அத்தகைய வசதியை ஏற்படுத்திக் கொடுக்க முன்வரும் நிறுவனங்களுக்கு, வியாபார ரீதியாக லாபம் இருப்பதில்லை என்பது, இந்த நிலைக்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.இருப்பினும், கடைக்கோடி மக்களையும் இணையம் சென்றடைய, பாரத் நெட் அமைப்பின் முயற்சிகள், அதிகரிக்கும் மொபைல் போன்கள் ஆகியவை கைகொடுக்கும் என, எதிர்பார்க்கலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|