பதிவு செய்த நாள்
07 டிச2016
05:15
மும்பை,:மத்திய அரசு, ‘பிரீபெய்டு’ மொபைல ்போன் சந்தாதாரர்கள், செல்லாத, 500 ரூபாய்க்கு, ‘ரீசார்ஜ்’ செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. பணத் தட்டுப்பாட்டை சமாளிக்க அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி, 15ம் தேதியுடன் முடிவடைகிறது.
இத்திட்டத்தை, மொபைல் போன் சேவை நிறுவன முகவர்கள் முறைகேடாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக, ஆர்ஜியோ தெரிவித்துள்ளது. விபரம் அறியாத வாடிக்கையாளர்களிடம், 500 ரூபாய்க்கும், ‘ரீசார்ஜ்’ செய்ய வேண்டும் எனக் கூறி, முகவர்கள் பலமுறை, ‘டாப் அப்’ செய்வதாக கூறப்படுகிறது.
இதனால் ஏர்டெல், வோடபோன் போன்ற முன்னணி நிறுவன வாடிக்கையாளர்கள், கூடுதல் காலத்திற்கு மொபைல் சேவையை பெறுவர். இதன் காரணமாக, அவர்கள் பிற நிறுவனங்களின் மொபைல் சேவைக்கு மாறுவது குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ஜியோ நிறுவனம், 2017 மார்ச் இறுதி வரை, தன் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக மொபைல் போன் சேவை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|