பதிவு செய்த நாள்
07 டிச2016
05:16
மும்பை,:\பலமுனை வரிகளை நீக்கி, ஒருமுனை வரிவிதிப்புக்கு வழிவகுக்கும், ஜி.எஸ்.டி., என்ற, சரக்கு மற்றும் சேவை வரி, 2017 ஏப்., 1 முதல், அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், ‘‘ஜி.எஸ்.டி., வரியால், ஜவுளித் துறைக்கு, சாதக, பாதகம் எதுவுமில்லை’’ என, சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர், ராகுல் ஏ.படேல் தெரிவித்து உள்ளார். மும்பையில், ‘ஐ.டி.எம்.இ., – 2016’ ஜவுளி கண்காட்சியில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம், மேலும் பேசியதாவது:சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறையால், நாடு முழுவதும், பொருட்களின் விலை, சீராக இருக்கும். பொதுவாக, இந்த வரிவிதிப்பால், ஜவுளித் துறைக்கு, எவ்வித பாதிப்பும் இருக்காது. அதே சமயம், அனைத்து வரிகளையும் ஒருங்கிணைப்பது, பெரிய ஜவுளி நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும்.
அவற்றின் ஜவுளி விலையில், அதிக வித்தியாசம் இருக்காது. அதனால், பெரிய நிறுவனங்கள் இடையிலான சந்தை போட்டி, சமமான அளவில் காணப்படும். இத்தகைய போக்கு, சிறிய ஜவுளி நிறுவனங்கள் அல்லது அமைப்பு சாரா துறையில் இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.இந்தியாவின் ஏற்றுமதியில், ஜவுளித் துறையின் பங்களிப்பு, 11 சதவீதமாக உள்ளது. இத்துறையின் சந்தை மதிப்பு, 2021ல், 22,300 கோடி டாலராக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த நிதியாண்டில், ஜவுளித் துறையின் ஏற்றுமதி, 4,000 கோடி டாலராக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|