ஜி.எஸ்.டி.,யால் ஜவுளி துறைக்கு பாதிப்­பில்லைஜி.எஸ்.டி.,யால் ஜவுளி துறைக்கு பாதிப்­பில்லை ... ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை, பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைப்பு - ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை, பொருளாதார வளர்ச்சி விகிதம் ... ...
‘வேர்ல்­டுபே’ ஆய்­வ­றிக்கை தகவல்:வலை­தள வர்த்­தக பரி­வர்த்­த­னையில்அமெ­ரிக்­காவை இந்­தியா விஞ்சும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2016
05:18

புது­டில்லி:‘வலை­தளம் வாயி­லான வர்த்­தக பரி­வர்த்­த­னை­களில், இந்­தியா, வரும், 2034ல், அமெ­ரிக்­காவை விஞ்சி, உல­க­ளவில் இரண்­டா­வது இடத்தை பிடிக்கும்’ என, ‘வேர்ல்­டுபே’ நிறு­வனம் தெரி­வித்து உள்­ளது. இந்­நி­று­வனம், இந்­தியா, சீனா, ஹாங்காங், தென்­கொ­ரியா, சிங்­கப்பூர், ஆஸ்­தி­ரே­லியா உள்­ளிட்ட, 30 நாடு­களின் மின்­னணு சந்­தை­களை ஆய்வு செய்து அறிக்கை வெளி­யிட்டு உள்­ளது. அதன் விபரம்:இந்­தி­யாவில், இணைய தள இணைப்பு வசதி சிறப்­பாக வளர்ச்சி கண்டு வரு­கி­றது. தற்­போது, 35 கோடி பேர், இணையம் பயன்­ப­டுத்­து­கின்­றனர்; இது, 2020ல், 60 கோடி­யாக அதி­க­ரித்து, வலை­தளம் வாயி­லான வர்த்­தகம் வளர துணை புரியும்.
இளைஞர்கள்
இந்­தி­யாவில், ஸ்மார்ட் போனில், இணை­யத்தை பயன்­ப­டுத்­து­வதும் அதி­க­ரித்து வரு­கி­றது. அதற்கு, இதர நாடு­களை விட, இந்­தி­யாவில் இணைய வச­திக்­கான, ‘3ஜி, 4ஜி’ சேவை கட்­டணம், மிகக் குறை­வாக உள்­ளதும் ஒரு காரணம்; இங்கு, ஸ்மார்ட் போனில் இணைய சேவைக்­கான கட்­டணம், அமெ­ரிக்­காவை விட, மூன்று மடங்கும், சீனாவை விட, இரு மடங்கும் குறை­வாக உள்­ளது. அதனால், குறிப்­பாக, இளை­ஞர்கள், ஸ்மார்ட் போன் மூலம், வலை­த­ளங்­களில் மிகச் சுல­ப­மாக பொருட்­களை வாங்க விரும்­பு­கின்­றனர். அதற்கு, அதி­க­ளவில் செல­வி­டு­கின்­றனர். இந்­தி­யாவின் இன்­னொரு பலம், இளை­ஞர்கள். மொத்த மக்கள் தொகையில், 35 வய­துக்கு உட்­பட்டோர் எண்­ணிக்கை, 70 சத­வீ­த­மாக உள்­ளது. இத்­த­கையோர், வலை­தளம் வாயி­லான வர்த்­தக வளர்ச்­சிக்கு, குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்பை வழங்கி வரு­கின்­றனர். வலை­தள வர்த்­த­கத்தில், 27 சத­வீதம் வங்­கி­களின், ‘கிரெடிட், டெபிட்’ கார்­டுகள் வாயி­லா­கவும், 22 சத­வீதம், ரொக்­கத்­திலும் நடை­பெ­று­கி­றது.
ஸ்மார்ட் போன்
தற்­போது, ‘இ – வாலெட்’ எனப்­படும், மின்­னணு பணப் பைகள் மூலம், வலை­த­ளத்தில் வாங்கும் பொருட்­க­ளுக்கு, பணம் செலுத்தும் முறை பிர­ப­ல­மாகி வரு­கி­றது. இதுவும், இந்­தி­யாவின் வலை­தளம் வாயி­லான வர்த்­தக வளர்ச்­சிக்கு, பெரும் பங்கை வழங்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.தற்­போது, 8 சத­வீதம் பேர் மட்­டுமே, மின்­னணு பணப் பைகளை பயன்­ப­டுத்­து­கின்­றனர். இது, வரும் ஆண்­டு­களில், வேக­மாக பெருகும். வரும், 2020ல், ஸ்மார்ட் போன் வாயி­லாக வாங்கும் பொருட்­க­ளுக்­கான, மின்­னணு பணப் பையின் சந்தை மதிப்பு, 510 கோடி டால­ராக உயரும் என, கணிக்­கப்­பட்டு உள்­ளது.
இத்­துடன், மத்­திய அரசின், ‘டிஜிட்டல் இந்­தியா, ஸ்மார்ட் சிட்டி’ போன்ற நவீன தொழில்­நுட்பம் சார்ந்த திட்­டங்­களும், இந்­தி­யாவின் வலை­தள வர்த்­தக பரி­வர்த்­தனை வளர்ச்­சிக்கு நன்கு உதவும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)