பதிவு செய்த நாள்
07 டிச2016
16:04
மும்பை : ரெப்போ வட்டி எனப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் மாதாந்திர பொதுக்குழு கூட்டம் மும்பையில் நடந்தது. கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. அதன்படி, ஏற்கனவே நடைமுறையில் 6.25 சதவீதம் வட்டி விகிதமே தொடர்கிறது.
பொருளாதார வளர்ச்சி குறைப்பு : மேலும் நடப்பாண்டில் 4வது காலாண்டில் சில்லரை வர்த்தக பணவீக்கம் 5 சதவீதாக இருக்கும் என்றும், நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.1 சதவீதமாக குறைக்கப்பட்டு இருப்பதாகவும், முன்னதாக இது 7.6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரூ.11.55 லட்சம் கோடி டெபாசிட்டு : பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கவர்னர் உர்ஜித் பட்டேல்.... இதுவரை 4 லட்சம் கோடி புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் யாரும் அதை பாதுகாக்க வேண்டாம். பழைய ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் மூலம் வங்கிகளில் இதுவரை ரூ.11.55 லட்சம் கோடி டெப்பாசிட்டு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரகாலமாக கூடுதலாக ரூ.500 மற்றும் ரூ.100 நோட்டுகளை அச்சடிக்கும் பணிகள் நடந்து வருகிறது. புதிய ரூ.1000 நோட்டை வெளியிடுவது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ரூபாய் நோட்டு பிரச்னை சரியானதும், வங்கிகளில் பணம் எடுக்க விதிக்கப்பட்டிருக்கும் நிர்ணயம் விலக்கி கொள்ளப்படும் என தெரிவித்திருக்கிறார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|